இக்கலைக்களஞ்சியம் 2000ம் ஆண்டளவில் பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையிலான குழுவினரால் தயாரித்து வெளியிடப்பட்டது.
இதன் முக்கியத்தும் என்னவெனில், இது இந்திய மற்றும் இலங்கை அறிஞர்களின் ஒரு கூட்டுத்தயாரிப்பாகும். இந்த கலைச்சொற்களஞ்சியத்தில் பல இந்திய அறிஞர்களும் பணியாற்றியிருப்பதுடன் இக் களஞ்சியத்தில் சிலசொற்களுக்கு இந்திய வழக்கு / இலங்கை வழக்கு என்று தனித்தனியாக சொங்கள் தரப்பட்டிருப்பதையும் காணலாம்.
இந்தக் கலைச்சொற்களஞ்சியத்தில் சில சொற்களுக்கான மொழிபெயர்ப்புகள், சரியாகக் கணினியறிவு உள்வாங்கப்படாமல், ஆங்கில-தமிழ் அகரமுதலி மொழிபெயர்ப்புகளாகவே காணப்படுகின்றன என்பதை என்னால் சுட்டிக்காட்ட முடியாமல் இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், 2000 ஆண்டின் பின் ஏற்பட்டுள்ள இணையத்தின் வளர்ச்சி, கணினித்துறையின் எழுச்சி காரணமாக நிறைய புதிய விடயங்கள், சொற்கள் கணினித்துறையால் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு நாம் இந்த கலைச்சொற்களஞ்சியத்தை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் மீள்பார்வைக்குட்படுத்தி வருகிறோம். இதை தற்போது LK Domain பதிவகத்தின் ஆதரவுடனும் இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஆதரவுடனும் சில தன்னார்வலர்கள் ஒன்றுகூடி இதனைச் செய்துவருகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment